ஒடிசா மாநிலம் கலஹண்டி, சிங்ஜரன் கிராமத்தின் அருகேயுள்ள ரயில் தண்டவாளத்தில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் உடல் - தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடப்பதாக பவானிபட்னா சதர் காவல் துறைக்கு தகவல் கிடைத்தது.
இரு குழந்தைகளைக் கொன்று தாயும் தற்கொலை!
புவனேஷ்வர்: ஒடிசாவில் தனது இரண்டு குழந்தைகளைக் கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
railtrack kalahandi
உடனே அங்கு வந்த காவல் துறையினர், உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்கு அனுப்பிவைத்தனர். பின்னர், அருகிலிருக்கும் அப்பெண்ணின் வீட்டிற்குச் சென்று பார்த்தபொழுது அவரது இரண்டு குழந்தைகளும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தனர்.
இதனையடுத்து, அப்பெண் தனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்டிருந்திருக்கலாம் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.
Last Updated : Sep 9, 2019, 1:36 PM IST