தமிழ்நாடு

tamil nadu

ஆபத்தான கடன்களைப் பெறும் கடனாளிகள் அதிகரிப்பு

By

Published : Nov 13, 2019, 5:15 PM IST

மும்பை: ஆபத்தான கடன்களை பெறும் நபர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.

Millenials driving credit demand with riskier loans

இந்தியாவில் கடன் பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது. 1980ஆம் ஆண்டுகளுக்குப் பின்னால் பிறந்தவர்கள், புதிய கடன்களைத் தேர்வு செய்வது 58 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது. பொதுவாக கடன் வழங்குநர்கள், சில்லறைப் பிரிவை பொறுத்து வழங்குகின்றனர். இவர்கள் கடைப்பிடிக்கும் யுக்தி பெரு நிறுவனங்களை (கார்ப்பரேட்) விடச் சிறந்தது. ஏனெனில், இவர்கள் வழங்கும் கடன்கள் அதிக வட்டியை அடிப்படையாகக் கொண்டது.
அதுவும் கடந்த இரண்டு ஆண்டுகளில் கடன் தேவை அதிகரித்துக் காணப்படுகிறது. இந்தக் குழுவின் முதலாவதாக கடன் வாங்குவோர், தங்களின் வாழ்க்கை தேவைக்காக கடன் வாங்குகின்றனர். அடுத்த இடத்தில் அவர்களின் வாழ்க்கை முறைகளை மேம்படுத்துதல் உள்ளது. மூன்றாவதாக அவர்களின் நோக்கம் வாகனங்களை வாங்குவது. அடுத்து அவசர காலங்களில் அவர்களது குடும்பங்களுக்கு வழங்குவதற்காக கடன்கள் பெறப்படுகின்றன.

அதிகரித்து வரும் நுகர்வு சார்ந்த போக்குகளைக் காண்பிப்பதில், கிரெடிட் கார்டுகள், தனிநபர் கடன்கள் மற்றும் நுகர்வோர் நீடித்த கடன்கள் ஆகியவற்றைக் கொண்ட பாதுகாப்பற்ற கடன்கள் பெறப்படுகின்றன.

பொதுவாக கடன் தேவைகளில் 72 விழுக்காடு இவைகளே பங்களிக்கின்றன. விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்லவும், ஆடம்பரப் பொருட்களை வாங்கவும் இந்தக் கடன்கள் பெறப்படுகிறது. தனிப்பட்ட தேவைக்காக கடன் வாங்க பலரும் வெட்கப்படுவதில்லை.

பொதுவாக கடன் வாங்குபவர்கள் கொள்ளும் கவலைகள் சிபில் பற்றியது. சிபில் ஸ்கோர் (மதிப்பெண்) 740க்கும் அதிகமாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.
சிபில் ஸ்கோர் பொதுவாக குஜராத்தில் சராசரி மதிப்பெண் 747 ஆகவும், ஹரியானா 743 ஆகவும், ராஜஸ்தான் 742 ஆகவும் உள்ளது. ஏற்கெனவே கடன் பெற்றவர்களில், 51 விழுக்காடு பேர் 700க்கும் குறைவான சிபில் ஸ்கோருடன் உள்ளனர். இந்தப் புள்ளிகள் கடன்களை திருப்பிச் செலுத்தும் போது மாறும் தன்மை கொண்டது.

இதையும் படிங்க: இந்தியாவின் பீம் செயலி, சிங்கப்பூரில் பயன்பாடு

ABOUT THE AUTHOR

...view details