தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விடுதி அறையில் மருத்துவ மாணவி தற்கொலை!

ஜெய்ப்பூர்: மருத்துவக் கல்லூரி மாணவி தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடுதி அறையில் மருத்துவ மாணவி தற்கொலை!

By

Published : Jul 21, 2019, 3:58 PM IST

ராஜஸ்தான் மாநிலம் , பிகானேரில் உள்ள சர்தார் படேல் மருத்துவமனை கல்லூரியில் பயிற்சி மருத்துவர் இருப்பவர் மாணவி மனிஷா குமாவத்(23). இவர் நேற்று மாலை நீண்ட நேரம் ஆகியும் அறையிலிருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த சக மாணவிகள் மனிஷா அறையின் ஜன்னலை திறந்து பார்த்தனர்.

அப்போது மாணவி மனிஷா மின் விசிறியில் தூக்கில் தொங்கியபடி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள் கதவை உடைத்து மாணவியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். பின்னர் தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த காவல் துறையினர் மனிஷாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details