தமிழ்நாடு

tamil nadu

தெலங்கானா கும்பமேளா: களைக்கட்டும் ஆதிவாசி பண்டிகை!

By

Published : Feb 6, 2020, 1:00 PM IST

ஹைதரபாத்: ஆசியவிலேயே மிகப்பெரிய ஆதிவாசி மக்களின் திருவிழா தற்போது களைக்கட்டியுள்ளது.

தெலுங்கானா கும்பமேளா: கலைக்கட்டும் ஆதிவாசி பண்டிகை!
தெலுங்கானா கும்பமேளா: கலைக்கட்டும் ஆதிவாசி பண்டிகை!


சம்மக்கா சாரலம்மா ஜாத்ரா அல்லது மேடாரம் ஜாத்ரா என்பது தெலங்கானாவின் கும்பமேளாவாகும். உத்திரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் நடைபெறும் கும்பமேளாவிற்கு அடுத்தப்படியாக இந்த பண்டிகைக்கு அதிக மக்கள் வருகின்றனர்.

தெலங்கானா மாநிலம் வாரங்கல் அருகில் முலுகு மாவட்டத்தில் உள்ள தாட்வாய் காட்டுப்பகுதியில் உள்ளது இந்த கோயில். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நான்கு நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவானது நேற்று (பிப்ரவரி 5ஆம் தேதி) தொடங்கி மிக விமர்சையாக நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க...நெகிழியை 100 % ஒழிக்கும் நோக்கில் களத்தில் ஒரு இளைஞர் !

இது குறித்து பக்தர் சுபாராணி கூறுகையில், இந்த கோயிலில் இருக்கும் அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தது. நாம் எதை நினைத்து வேண்டினாலும் அது நடக்கும்” என்கிறார்.

தெலுங்கானா கும்பமேளா: கலைக்கட்டும் ஆதிவாசி பண்டிகை!

அடக்குமுறையை எதிர்த்து சம்மக்கா என்ற அன்னையும், சாரலம்மா என்ற மகளும் நடத்திய போர், தியாகத்தின் நினைவாக இந்த திருவிழா நடத்தப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details