தமிழ்நாடு

tamil nadu

மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 77 பேருக்கு கரோனா - 302 ஆக உயர்வு!

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 302 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.

By

Published : Mar 31, 2020, 9:34 PM IST

Published : Mar 31, 2020, 9:34 PM IST

sdsd
sd

கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் இந்தியாவில் தினந்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கரோனா வைரசால் நாளுக்கு நாள் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநில அரசு, கரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றது.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 77 நபர்கள் கரோனா வைரஸ் காரணமாக பாதிப்படைந்துள்ளனர். அதில், 50 பேர் மும்பையிலும், அஹமட்நகரில் 3 பேர், புனேவில் 2 பேர், தானேவில் 2 பேர், கல்யாண்-டோம்பிவலி பகுதியில் 2 பேர், நவி மும்பையில் 2 பேர், வாஷி-விரார் பகுதியில் 2 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

அம்மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 302 ஆக உயர்ந்துள்ளன.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் ஒரே நாளில் 57 பேருக்கு கரோனா தொற்று உறுதி; எண்ணிக்கை 124ஆக உயர்வு!

ABOUT THE AUTHOR

...view details