தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 24, 2020, 2:08 PM IST

ETV Bharat / bharat

தொழில்கள் அமைப்பதற்கான செயல்முறை எளிமைப்படுத்தப்படும் - மகாராஷ்டிரா அரசு

மும்பை: உத்தவ் தாக்கரே செவ்வாய்க்கிழமை தனது மாநிலத்தில் தொழில்கள் அமைப்பதற்குத் தேவையான அனுமதி எளிமைப்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தொழில்கள் அமைப்பதற்கான செயல்முறை எளிமைப்படுத்தப்படும்-
தொழில்கள் அமைப்பதற்கான செயல்முறை எளிமைப்படுத்தப்படும்-

மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கடந்த செவ்வாய்க்கிழமை காணொலி மாநாட்டின் மூலம் தனியார் நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு உரையாற்றினார். அதில், "கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களைச் சரிசெய்ய மாநில அரசு கடுமையாகப் போராடிவருகிறது.

கரோனா வைரஸ் (தீநுண்மி) வீட்டில் இருப்பது பாதுகாப்பானது என எவ்வாறு கற்றுக்கொடுத்ததோ அது மாதிரி மகாராஷ்டிரா மாநிலத்தில் முதலீடு செய்வதும் பாதுகாப்பான ஒன்றே. இங்கு முதலீடு செய்யும் அனைவரது பணமும் பாதுகாப்பாக இருக்கும்" என உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

மேலும் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில், தொழில்கள் அமைப்பதற்குத் தேவையான அனுமதி எளிமைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பெட்ரோல் விலையேற்றத்துக்கு எதிராக, காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details