அண்டை மாநிலங்களிலிருந்து சட்டவிரோதமாக கடத்தி வரப்படும் மணல் மற்றும் மதுபானம் தொடர்பாக ஆந்திர மாநில காவல் துறையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே மே மாதத்தில் மணல் மற்றும் மதுபானங்கள் கடத்தலைத் தடுக்க மாநில அரசால் சிறப்பு அமலாக்கப் பிரிவு தொடங்கப்பட்டது.
இந்தப் பிரிவினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் 10க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 72 லட்சம் மதிப்பிலான மதுபானங்களை காவல் துறையினர் அழித்தனர்.
இதுகுறித்து கிருஷ்ணா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவீந்திரநாத் பாபு பேசுகையில், ''கிருஷ்ணா மற்றும் மேற்கு கோதாவரி பகுதிகள் வழியாக வாகனங்களில் கடத்தி வரப்படும் மதுபானங்களைப் பிடிக்க தீவிரமாக சோதனை நடத்தி வந்தோம்.