தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 18, 2020, 7:29 AM IST

ETV Bharat / bharat

மின்கசிவு காரணமாக தீ விபத்து: ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் நாசம்

புதுச்சேரி: நகரப்பகுதியில் உள்ள வீட்டில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாயின.

Accident
Accident

புதுச்சேரி நெல்லித்தோப்பு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வீதியை சேர்ந்தவர் ஸ்ரீபிரியா. இவரது வீட்டில் வாடகைக்கு வசிப்பவர்கள் பிரகாஷ், சரண்யா தம்பதியினர். பிரகாஷ் கூலி வேலைக்கு சென்றுவிட்ட பிறகு, திடீரென குளிர்சாதன இயந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு அருகில் வாஷிங்மெசின், பெட் உள்ளிட்டவை தீப்பிடித்து எரிய தொடங்கின. இதையடுத்து, தீயணைப்பு அலுவலர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த வீீர்கள் ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் ஒரு லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாயின. இது குறித்து உருளையன்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details