தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கூடத்தாயி கொலை வழக்கு: சிறையில் ஜாலி தற்கொலை முயற்சி

திருவனந்தபுரம்: கேரளாவை உலுக்கியெடுத்த கூடத்தாயி கொலை வழக்கில், முக்கிய குற்றவாளியான ஜாலி ஷாஜூ சிறையில் தற்கொலைக்கு முயன்றதாகச் சிறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

By

Published : Feb 27, 2020, 12:16 PM IST

kerala serial murder
kerala serial murder

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள 'கூடத்தாயி' என்ற கிராமத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் 2002-2016ஆம் ஆண்டு காலகட்டத்தில் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இதுகுறித்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அதே குடும்பத்தைச் சேர்ந்த ஜாலி ஷாஜூ என்பவர்தான் உயிரிழந்த உறவினர்களுக்கு, உணவில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்தார் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு கோழிக்கோடு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், சிறையில் உள்ள ஜாலி ஷாஜூ, தன் மணிக்கட்டை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக சிறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

தற்போது கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் ஜாலி அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர் குணமடைவார் என்றும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க : டெல்லி வன்முறை: மம்தா எழுதிய உருக்கமான கவிதை

ABOUT THE AUTHOR

...view details