தமிழ்நாடு

tamil nadu

வெள்ளம் பாதித்த 121 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கிய ராமோஜி குழுமம்

By

Published : Feb 9, 2020, 8:17 PM IST

திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ராமோஜி குழுமம் சார்பில், குடும்பஸ்ரீ, ‘I Am For Alleppey’ ஆகிய திட்டங்களின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை 121 குடும்பங்களுக்கு கேரள முதமைச்சர் பினராயி விஜயன் வழங்கினார்.

Ramoji
Ramoji

கேரளாவில் வெள்ளம் பாதிக்கப்பட்ட 121 குடும்பங்களுக்கு ராமோஜி குழுமம் சார்பில் கட்டப்பட்ட வீடுகளின் பயனாளர்களுக்கு இன்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வழங்கினார். கேரள அரசின் வீடு புனரமைப்புத் திட்டதிற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரியத் திட்டத்திற்கான நிதி பொதுமக்கள், குழும ஊழியர்கள் உள்ளிட்ட பலரிடம் திரட்டப்பட்டது.

இந்த விழாவில் மாநில முதலமைச்சர் உள்ளிட்ட முன்னணி அமைச்சர்கள், ராமோஜி குழுமத்தின் ஈநாடு நிர்வாக இயக்குநர் சி.ஹெச். கிரண், மார்கதரிசி சிட்பண்ட்ஸ் நிர்வாக இயக்குநர் சைலஜா கிரண் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய ஈநாடு குழும நிர்வாக இயக்குநர் சி.ஹெச். கிரன், பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்டோருக்கு ராமோஜி குழுமம் தொடர்ச்சியான உதவிகளை வழங்கிவருகிறது. இதை எங்களது கடமையாக மேற்கொண்டுவருகிறோம். இந்த பணிகளுக்கு ராமோஜி குழும பணியாளர்கள் தங்களின் உதவிகளை தொடர்ச்சியாக தந்துவருகின்றனர் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஆலப்புழா மாவட்டத்தின் சார் ஆட்சியர் கிருஷ்ணா தேஜா இந்தத் திட்டத்திற்கு உதவிய ராமோஜி குழுமம் மற்றும் தெலுங்கு மக்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் மாதத்தின் பருவ மழையின்போது ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் கேரளாவின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கின. குறிப்பாக ஆலப்புழா பகுதி கடும் பாதிப்பிற்குள்ளான நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான புனரமைப்புப் பணியில் ராமோஜி குழுமம் ஈடுபட்டது.

ஈநாடு புனரமைப்பு நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட, இந்த நலத்திட்டத்தை ஆலப்புழா மாவட்டத்தின் சார் ஆட்சியர் கிருஷ்ணா தேஜா தொடர்ச்சியாக மேற்பார்வையிட்டார். 7.7 கோடி ரூபாய் மதிப்பில் இந்தத் திட்டம் நிறைவடைந்துள்ளது. மீண்டும் வெள்ளம் ஏற்பட்டால் பாதிக்காத வண்ணம் அனைத்து வீடுகளும் அடித்தளத்திலிருந்து ஒன்றரை மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ளன. குஜராத் பூகம்பம், தமிழ்நாடு சுனாமி, ஆந்திரா ஹுட் ஹுட் புயல் உள்ளிட்ட பல்வேறு பேரிடர் காலத்தின் போது ஈநாடு குழுமம் இதுபோன்ற பல்வேறு தொண்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இது குழுமத்தின் பத்தாவது நலத் திட்டமாகும்.

இதையும் படிங்க: முதலமைச்சரின் அறிவிப்புக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து

ABOUT THE AUTHOR

...view details