தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 18, 2019, 11:52 AM IST

ETV Bharat / bharat

"காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளது"- பழ.நெடுமாறன் வேதனை!

புதுச்சேரி: மக்களுக்கு மத்திய அரசு நம்பிக்கை துரோகம் செய்துள்ளது என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி

முள்ளிவாய்க்கால் சம்பவத்தின் 10-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி புதுச்சேரியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பழ.நெடுமாறன், காஷ்மீர் இந்தியாவுடன் இணையும் போது நேரு கொடுத்த வாக்குறுதிக்கு இந்திய அரசு தற்போது நம்பிக்கை துரோகம் செய்துள்ளது என்றார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பழ.நெடுமாறன்

மேலும் காஷ்மீருக்கு மட்டும் தனி சலுகை தரக்கூடாது என அமித்ஷா நாடாளுமன்றத்தில் பேசியது முற்றிலும் தவறானது என்றும், இவ்விவகாரம் காஷ்மீரோடு முடியப்போவதில்லை என்றும் வேதனை தெரிவித்தார். அதேபோல் நாகலாந்து, மிசோரம், அருணாச்சலப்பிரதேசம், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு உரிமையும் எதிர்காலத்தில் பறிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் பழ.நெடுமாறன் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details