தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 30, 2020, 4:41 PM IST

ETV Bharat / bharat

சொந்த மாவட்டத்தில் அஜித் ஜோகியின் இறுதிப் பயணம்

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர் அஜித் ஜோகியை அவரது சொந்த மாவட்டத்தில் அடக்கம் செய்துள்ளனர்.

அஜித் ஜோகி
அஜித் ஜோகி

சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதலமைச்சர் அஜித் ஜோகி நேற்று மாரடைப்பு காரணமாக காலமானார். இதனைத் தொடர்ந்து, சொந்த மாவட்டமான கவுரேலா பேன்ட்ரா மார்வாஹியில் முழு அரசு மரியாதையுடன் ஜோகியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

மாநில அரசு சார்பில் மூன்று நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் பூபேஷ் பாகல், மாநில அமைச்சர்கள், பாஜக தேசிய துணை தலைவர் ராமன் சிங் ஆகியோர் ஜோகியின் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக, உடல் நிலை பாதிக்கப்பட்ட அவர், ஒன்பது மாதங்களாக கோமாவில் இருந்து வந்தார். மே 9ஆம் தேதி அவருக்கு முதல்முறையாக மாரடைப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, சுவாசிக்க சிரமப்பட்டு வந்த ஜோகியை அவரது உறவினர்கள் ஸ்ரீ நாராயண மருத்துவமனையில் சேர்த்தனர். புதன்கிழமை இரவு அவருக்கு இரண்டாவது முறையாக மாரடைப்பு ஏற்பட்டது.

வென்டிலேட்டர் உதவியோடு அவர் சுவாசித்துவந்தார். மார்வாஹி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த ஜோகி, 2000ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு வரை சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தார். கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி ஜனதா காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார். 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட ஜனதா காங்கிரஸ் ஐந்து தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது.

இதையும் படிங்க: 'நாட்டின் வரலாற்றுப் பிழைகளைத் திருத்திய நரேந்திர மோடி!'

ABOUT THE AUTHOR

...view details