தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜம்மு காஷ்மீர், வீட்டுச் சிறையிலிருந்து நால்வர் விடுவிப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியனில் வீட்டுச் சிறை வைக்கப்பட்டிருந்த மேலும் நான்கு அரசியல்கட்சித் தலைவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

By

Published : Jan 17, 2020, 5:12 PM IST

J-K admin releases 4 politicians from house arrest
J-K admin releases 4 politicians from house arrest

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அதிகாரமளித்த சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதுடன், அம்மாநிலத்தை மத்திய அரசு இரண்டு யூனியன்களாக பிரித்தது. அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முன்னாள் முதலமைச்சர்கள் பரூக் அப்துல்லா, ஓமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட 26 பேர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.

தற்போது நிலைமை சீராகி வருவதால், வீட்டுச் சிறையிலுள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவராக விடுவிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று ஐந்து பேர் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் இன்றும் நான்கு பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள், முன்னாள் அமைச்சர் அப்துல் ஹக் கான், முன்னாள் துணை சபாநாயகர் நஸீர் அஹமது குரேஷி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அப்பாஸ் வானி, அப்துல் ராஷித் ஆகியோர் ஆவார்கள்.

இவர்கள் முறையே பொதுமக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி), தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்களாவார்கள்.

இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீர், வீட்டுச் சிறையிலிருந்து மேலும் ஐந்து தலைவர்கள் விடுவிப்பு

ABOUT THE AUTHOR

...view details