தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியா சுயசார்பாக மாறுவதில் எவ்வித பிரச்னையும் இல்லை: மோகன் பகவத்

இந்தியாவின் பாரம்பரியம், நம்பிக்கைகள் ஆகியவற்றோடு மக்கள் தங்களின் எண்ணங்களை நிறைவேற்றினால் இந்தியா சுயசார்பாக மாறுவதில் எவ்வித கடினமும் இருக்காது என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

By

Published : Aug 17, 2020, 1:01 PM IST

indias-traditions-will-make-it-self-reliant-without-any-difficulty-says-rss-chief
indias-traditions-will-make-it-self-reliant-without-any-difficulty-says-rss-chief

இரண்டு நாள் பயணமாக சத்தீஸ்கர் சென்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், அப்பகுதியில் உள்ள முக்கிய ஆர்எஸ்எஸ் தலைவர்களான சுரேந்திர குமார் உள்ளிட்டோரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அந்த ஆலோசனைக் கூட்டத்தில் மோகன் பகவத் பேசுகையில், ''கிராமப்புற பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண வேண்டும். ஒருங்கிணைந்த முயற்சியே நாட்டை சுயசார்பாக மாற்றும். கிராமப்புற பொருளாதாரத்தை முன்னேற்றுவதோடு, குடிசைத் தொழில்களையும் ஊக்குவிக்க வேண்டும். மக்கள் மத்தியில் சுதேசி எண்ணம் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் காலநிலை, நிலம், நம்பிக்கை, பாரம்பரியம், வலிமை என அனைத்தும் அதிகமாக உள்ளது. அதனைக் கொண்டு நாம் உறுதியாக நமது எண்ணங்களை நிறைவேற்றினால், இந்தியாவை சுயசார்பு நாடாக மாற்றுவதில் எவ்வித கடினமும் இருக்காது.

சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, நாட்டை சுயசார்பாக மாற்ற தனிநபராகவும் குழுவாகவும் நமது கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.

நாட்டை சுயசார்பாக மாற்றத் தேவையான அனைத்து விஷயங்களையும் நமது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பொது வாழ்க்கை இரண்டிலும் பின்பற்றினால், உலக அளவில் இந்தியா மீண்டு எழும்'' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக மாறும் இந்தியா!

ABOUT THE AUTHOR

...view details