ஹரியானா, ஹிசாரில் நேற்று இராணுவ ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் உடல் தேர்விலும் மருத்துவ பரிசோதனையிலும் தேர்ச்சிப் பெற்ற ராபின், மங்கல், சஞ்சய், பிரேம்ஜீத், சஞ்சய், பாரத், சுமித், தீபக் ஆகிய இளைஞர்கள் இரவு ஆட்டோ ஒன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது ராம்ராய் கிராமத்தின் அருகே வேகமாக வந்த எண்ணெய் டேங்கர் லாரியானது, அந்த ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் சம்பவ இடத்திலேயே அந்த எட்டு இளைஞர்கள் உட்பட பத்து பேர் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.