தமிழ்நாடு

tamil nadu

குத்துச்சண்டை பயிற்சியாளர் பாலியல் குற்றச்சாட்டில் கைது!

ஹரியானா: தன்னிடம் குத்துச்சண்டை பயிற்சி எடுத்த 19 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பயிற்சியாளர் கைது செய்யப்பட்டார்.

By

Published : Mar 17, 2020, 2:40 PM IST

Published : Mar 17, 2020, 2:40 PM IST

boxing coach rape case  boxing coach rape case in haryana  boxing coach rapes his student  haryana rape case  boxing coach rapes student  குத்துச்சண்டை பயிற்சியாளர் பாலியல் குற்றச்சாட்டு கைது
ஹரியானாவைச் சேர்ந்த குத்துச்சண்டை பயிற்சியாளர் பாலியல் குற்றச்சாட்டில் கைது

ஹரியானா குத்துச் சண்டை பயிற்சியாளர் தன்னிடம் பயிற்சி எடுத்த 19 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் கடந்த மாதம் மேற்குவங்கத்தில் நடைபெற்ற குத்துச் சண்டைப் போட்டியில் பங்குபெறுவதற்காக தனது பயிற்சியாளர் மற்றும் சக குத்துச்சண்டை வீரர்களுடன் டெல்லி ரயில் நிலையத்திலிருந்து கொல்கத்தா சென்றார்.

ரயில் பயணத்தின் போதும், கொல்கத்தாவில் தங்கியிருந்த போதும் குத்துச் சண்டை பயிற்சியாளர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்று வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ஹரியானா அருகேயுள்ள சோனிபட்டில் வைத்து குத்துச்சண்டை பயிற்சியாளரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். கைது செய்யப்பட்ட குத்துச்சண்டை பயிற்சியாளர் ஹரியானா சோனிபட்டில் குத்துச்சண்டை பயிற்சி மையத்தை நடத்திவருகிறார். அவரிடம் தேசிய அளவிலான குத்துச்சண்டைப் போட்டிகளில் பங்குபெறும் வீரர்கள் பயிற்சி பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ரயிலில் பெண் தற்கொலை - பயணிகள் அதிர்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details