தமிழ்நாடு

tamil nadu

இந்தியாவுக்கு விவசாயிகளால் பெருமை: பிரதமர் மோடி

By

Published : Apr 30, 2020, 10:51 AM IST

டெல்லி: நாட்டுக்கு உணவளிக்கும் விவசாயிகளால் இந்தியா பெருமை கொள்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மோடி
மோடி

கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், மக்களின் அத்தியாவசிய தேவைகளை தீர்க்கும் வகையில் பல்வேறு விதமான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுவருகிறது.

இதனிடையே, மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கரோனாவைக் கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோதிலும், விவசாயத் துறை தங்கு தடையின்றி செயல்பட்டுவருவதாக தெரிவித்தார். மேலும், மற்ற துறைகள் பாதிப்படைந்தது போல் இத்துறையின் வளர்ச்சியில் பாதிப்பு இருக்காது எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

இதனை குறிப்பிட்டு மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "விவசாயிகளால் இந்தியா பெருமை கொள்கிறது. நாட்டுக்கு உணவளிப்பவர்களின் உரிமைகளை காக்க அரசு உறுதி பூண்டுள்ளது. அவர்களின் நலனை காக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது" என பதிவிட்டுள்ளார்.

விவசாயத் துறையின் உள்நாட்டு மொத்த உற்பத்தி கடந்தாண்டு3.7 விழுக்காடாக இருந்தது. மக்கள் தொகையில் 50 விழுக்காட்டினர் விவசாயத் துறையை நம்பியே உள்ளனர்.

இதையும் படிங்க: ஏழைகளைக் காக்க 65 ஆயிரம் கோடி அவசியம் - ராகுலிடம் ராஜன்

ABOUT THE AUTHOR

...view details