தமிழ்நாடு

tamil nadu

கங்கையில் சுற்றும் நன்னீர் டால்பின்கள்: வைரலாகும் காணொலி

By

Published : Apr 27, 2020, 4:12 PM IST

லக்னோ: மீரட் வழியாகச் செல்லும் கங்கை நதியில் நன்னீர் டால்பின் ஜோடி ஒன்று உலாவரும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

dolphins-circling-the-ganges-viral-video
dolphins-circling-the-ganges-viral-video

உத்தரப் பிரதேசம் மாநிலம் மீரட்டின் கங்கை நதியில் நன்னீர் இன டால்பின் ஜோடி ஒன்று துள்ளிக்குதிப்பதைக் காணொலியாக எடுத்த அப்பகுதி ஐ.எஃப்.எஸ். அலுவலர் ஆகாஷ் தீப் பதவன் என்பவர் அதனை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர், "ஒரு காலத்தில் கங்கை-பிரம்மபுத்திரா-மேக்னா நதிகளில் அதிகளவில் காணப்பட்ட நன்னீர் டால்பின்கள், இப்போது ஆபத்தில் உள்ளன. அவை நன்னீரில் வாழ்கின்றன. கங்கையில் அவற்றைக் காண்பது நற்பேறு" எனப் பதிவிட்டுள்ளார்.

அவர் அந்தப் பதிவில் அதைப் படம்பிடித்த நேரத்தைக் குறிப்பிடவில்லை. கரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இதுபோன்ற காணொலிகளை சமூக வலைதளங்களில் பலர் பகிர்ந்துவருகின்றனர்.

இதையும் படிங்க:தளபதி பட பாடலில் கரோனா விழிப்புணர்வு - மாஸ் காட்டிய ஸ்ரீதரின் வைரல் வீடியோ

ABOUT THE AUTHOR

...view details