தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 12, 2019, 4:15 PM IST

ETV Bharat / bharat

தென்னை மர உச்சியில் சிக்கியவர் பத்திரமாக மீட்பு!

கேரளா: தென்னை மர உச்சியில் சிக்கிக் கொண்டவரை, ஒரு மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.

தென்னை மர உச்சி

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் ஜானி என்பவர் 40 அடி உயரமுள்ள தென்னை மரத்தில் தேவையில்லாத மட்டைகளை வெட்டுவதற்காக காலை 11.30 மணிக்கு மர உச்சிக்குச் சென்றுள்ளார்.

மரத்தின் உச்சிக்குச் சென்று தென்னம் மட்டையை வெட்ட ஆரம்பித்தபோது ஜானிக்கு தலை சுற்ற ஆரம்பித்தது. சூழ்நிலையின் விபரீதம் புரிந்த அவர், கயிரை கொண்டு தன்னை அப்படியே மரத்தோடு இணைத்துக் கட்டிக் கொண்டார்.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ஒரு மணி நேர கடும் போராட்டத்திற்கு பிறகு 40 அடி உயர தென்னை மர உச்சியில் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்தவரை பத்திரமாக மீட்டனர்.

தென்னை மர உச்சியில் சிக்கிக் கொண்டவரை பத்திரமாக மீட்பு

40 அடி உயர தென்னை மரத்தில் சிக்கிக் கொண்டவரை லாவகமாக தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்ட சம்பவம், அப்பகுதி மக்களின் பாராட்டைப் பெற்றது.

ABOUT THE AUTHOR

...view details