தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 13, 2020, 12:51 PM IST

ETV Bharat / bharat

சீக்கியர்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக அமேசான் மீது வழக்கு

டெல்லி: பொற்கோயிலின் படத்துடன் கழிப்பறை தரை விரிப்புகளை விற்பனை செய்ய அனுமதித்ததற்காக அமேசான் மீது சீக்கிய குருத்வாரா மேலாண்மைக் குழு தலைவர் மஞ்சீந்தர் சிங் சிர்சா வழக்கு தொடர்ந்துள்ளார்.

amazon had FIR
amazon had FIR

சீக்கிய குருத்வாரா மேலாண்மைக் குழு தலைவர் மஞ்சீந்தர் சிங் சிர்சா அமேசான் இந்தியாவுக்கு எதிராக புகார் அளித்துள்ளார். அதில் சில்லறை விற்பனையாளரான அமேசான் இந்தியா, சீக்கிய சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், அதில், தரை விரிப்பு மற்றும் குளியலறை விரிப்பு உள்ளிட்ட பொருட்களில் சீக்கியர்களின் பொற்கோயில் படங்களை அச்சிட்டு சந்தைப் படுத்துவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பொற்கோயிலின் படங்களை அச்சிட்டு கழிப்பறை பாய்களை விற்பனைக்கு வைக்க அனுமதித்ததற்காக அமேசான் மீது இந்த வழக்கு தொடர்வதாகவும் மஞ்சீந்தர் சிங் சிர்சா ட்வீட் பதிவிட்டுள்ளார்.

மேலும், பொற்கோயிலின் படங்களுடன் அச்சிடப்பட்ட குளியலறை விரிப்புகளைக் காட்டும் சில படங்களையும் வெளியிட்டுள்ளார் .

மேலும் அமேசான் சீக்கிய உணர்வுகளின் மீது பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகிறது என்றும் இது முதல்முறை இல்லை கடந்த 2018ஆம் ஆண்டும் இவ்வாறு நடந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அமேசான் அந்த விற்பனையாளர்களின் உற்பத்திப் பொருட்களை தடை செய்ய வேண்டும் என்றும் இதற்கு பொறுப்பேற்று உலகளவில் அவர்கள் மன்னிப்பு கேட்ட வேண்டும் எனவும் சிர்சா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இந்தியா வருகிறார் இலங்கை பிரதமர் ராஜபக்ச!

ABOUT THE AUTHOR

...view details