புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை ஏழு மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அம்மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ஷாஜகான் இன்று காலை ரெயின்போ நகர் மூன்றாவது குறுக்குத் தெருவில் உள்ள வாக்குச்சாவடி அருகே இருந்த காங்கிரஸ் முகவர் இடத்தில் நாற்காலியில் அமர்ந்திருந்தார்.
இதனைக் கண்ட என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன், அமைச்சர் பொறுப்பில் உள்ளவர் வாக்குப்பதிவு மையம் அருகே அமர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமாருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார் என எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.