தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 22, 2020, 3:52 PM IST

ETV Bharat / bharat

உணவின்றி தவித்த பெல்ஜியம் மாணவிக்கு உதவிக்கரம் நீட்டிய டெல்லி காவல் துறை!

இந்திய நண்பனுடன் படிக்க வந்த பெல்ஜியம் மாணவி ஒருவர் ஊரடங்கினால் பெரும் அவதிக்கு உள்ளாகினார். உணவின்றி தவித்த அவரை மீட்ட காவல் துறையினர், தேவையான வசதிகளை செய்துகொடுத்துள்ளனர்.

ஊரடங்கு பரிதாபங்கள்
ஊரடங்கு பரிதாபங்கள்

டெல்லி: ஊரடங்கினால் பெரு வாரியான மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கை முறையை இழந்து பல்வேறு கட்ட இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.

அந்தவகையில் தலைநகர் டெல்லியில் அதுபோன்ற ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. மேக்ஸி எனும் பெல்ஜியம் மாணவி தந்து, இந்திய நண்பரான அக்‌ஷேவுடன் தங்கும் விடுதியில் வசித்து வந்துள்ளார். இருவரும் ஊரடங்கினால் பெரிதளவில் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

வேலை பார்க்க சொன்ன உதவி ஆய்வாளரைத் தாக்கிய காவலர்

வசந்த் குஞ் எனுமிடத்தில் உள்ள தங்கும் விடுதியில் இருந்த இருவருக்கும் நாட்கள் செல்ல செல்ல கையில் இருந்த பணம் அனைத்து செலவாகியுள்ளது. அதன் விளைவு, இருவரும் தெருவில் குடியேறியுள்ளனர்.

இதனையறிந்த டெல்லி காவல் துறை, அவர்களுக்கு உதவ முன்வந்தது. அதன்படி இருவருக்கும் தங்குவதற்கான இலவச விடுதியும் ஏற்பாடு செய்துகொடுத்து, இலவச உணவு கிடைக்கவும் வழிவகைசெய்துள்ளது டெல்லி காவல் துறை.

பன்றி தாக்கியதில் நான்கு வயது சிறுவன் மரணம்!

இந்த உதவிக்கு கருத்து தெரிவித்துள்ள மேக்ஸி, “இந்தியா மீதிருந்த மதிப்பு தற்போது பன்மடங்கு உயர்ந்துள்ளது. இந்தியர்கள் அனைவரும் உதவும் எண்ணம் கொண்டர்வர்கள்” என நன்றியை தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details