தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 23, 2020, 6:45 PM IST

ETV Bharat / bharat

ஊரடங்கு உத்தரவு - மதுபானக்கடைகளில் அலைமோதிய கூட்டம்!

புதுச்சேரி: மக்கள் ஊரடங்கைத் தொடர்ந்து, மதுபானக்கடைகளில் குடிமகன்கள் அலைமோதியதால் விற்பனையாளர்கள் திணறினர்.

மதுபான கடைகளில் அலைமோதிய கூட்டம்
மதுபான கடைகளில் அலைமோதிய கூட்டம்

கரோனா வைரஸ் பெருந்தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க, புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகின்றது. இதன் ஒரு பகுதியாக, பொது இடங்களில் மக்கள் கூடுவதைத் தடுக்கும் நோக்கில், இன்று மாலை 9 மணி முதல் மார்ச் இறுதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததுள்ளது.

இந்த உத்தரவின்படி, அத்தியாவசியப் பொருள்கள் தவிர பிற கடைகள் திறக்கப்படாது. புதுச்சேரி முதலமைச்சரின் இந்த அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து, மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதத் தொடங்கியது. இதனால் மதுபானக்கடைகளின் விற்பனையாளர்கள் திணறினர்.

மதுபானக் கடைகளில் அலைமோதிய கூட்டம்

சில கடைகளில் மதுபானங்கள் விரைவாகத் தீர்ந்ததால், வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தியடைந்தனர். புதுச்சேரியில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க குவிந்தக் கூட்டத்தைவிட, மதுக்கடைகளில் அதிக வாடிக்கையாளர்கள் குவிந்தது காவல்துறையினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: கனிகா கபூரின் தோழியை வலைவீசி தேடும் லக்னோ காவல் துறை!

ABOUT THE AUTHOR

...view details