டெல்லி: யாரையும் எதிர்பார்க்காமல் இந்தியா தன்னிச்சையாக செயற்கை சுவாசக் கருவிகள் தயாரிப்பில் முனைப்புக் காட்டி வருவதாக மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் மிகுதியாக பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு இந்தியா உயர்ந்து நிற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டில் இந்திய செயற்கை சுவாசக் கருவிகள் சந்தையில் 444.74 கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்களை இறக்குமதி செய்திருந்தது.
ஆனால் தற்போது கரோனா காலம் என்பதால், உலகளவில் செயற்கை சுவாசக் கருவிகளின் தேவை அதிகரித்தது. இச்சூழலில் இந்தியா தன் உள்நாட்டு படைப்புகளை ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளது.