மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் உள்ள 288 தொகுதிகளுக்கும், ஹரியானா சட்டப்பேரவையில் உள்ள 90 தொகுதிகளுக்கும் கடந்த 21ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிராவில் 61.13 விழுக்காடு வாக்குகளும், 90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானாவில் 68 விழுக்காடு வாக்குகளும் பதிவாகின. இன்று காலை 8 மணிக்கு இரு மாநிலங்களிலும் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.
மகாராஷ்டிராவில் 269 வாக்கு எண்ணும் மையங்களிலும், ஹரியானாவில் 90 வாக்கு எண்ணும் மையங்களிலும் வாக்குகள் எண்ணப்படவுள்ளது. இதையடுத்து மகாராஷ்டிரா வாக்கு எண்ணும் மையங்களில் 25 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஹரியானாவில் மூன்றடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.