மத்தியப் பிரதேச முதலமைச்சர் கமல்நாத் ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து, அங்கு பாஜக ஆட்சி அமைக்கும் நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜா கூறுகையில், "ஜோதிராதித்ய சிந்தியா தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியதே கமல்நாத் அரசு கவிழ்வதற்குக் காரணமாக அமைந்தது. இந்த வாய்ப்புக்காகத் தான் பாஜக காத்துக் கொண்டிருந்தது.
பல மாநிலங்களில் நிலவும் அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு காங்கிரஸ் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மத்தியப் பிரதேசத்தைத் தொடர்ந்து பல மாநிலங்களில் அக்கட்சிக்கு இந்த நிலைதான் ஏற்பட்டுள்ளது.