தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 25, 2020, 12:57 AM IST

ETV Bharat / bharat

தற்கொலை செய்து கொண்ட மாணவி எழுதிய கடிதம் பிரதமருக்கு அனுப்பிவைப்பு

உத்தரப் பிரதேசம்: சுதந்திர தினத்தன்று தற்கொலை செய்து கொண்ட பத்தாம் வகுப்பு மாணவியின் கடிதத்தை, மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் (யு.பி.எஸ்.சி.பி.சி.ஆர்) பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ளது.

Sending a letter to the Prime Minister written by a student who has committed suicide
Sending a letter to the Prime Minister written by a student who has committed suicide

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் சுதந்திர தினத்தன்று ஊழல், பாலியல் வன்கொடுமைகள், அதிகரித்து வரும் காற்று மாசு போன்ற பல்வேறு பிரச்னைகளால் மன அழுத்தத்திற்கு ஆளான பத்தாம் வகுப்பு மாணவி, தற்கொலை செய்து கொண்டார். இந்த அழுத்தமான விஷயங்கள் அவரை தற்கொலைக்கு கட்டாயப்படுத்தியுள்ளன.

மேலும் யு.பி.எஸ்.சி.பி.சி.ஆரின் 'மன் கி பாத்' வானொலி நிகழ்ச்சியில், பத்தாம் வகுப்பு மாணவி குறிப்பிட்டுள்ள பிரச்னைகள் குறித்து விவாதிக்க கோரி கடிதத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ளார். இந்நிலையில், யு.பி.எஸ்.சி.பி.சி.ஆரின் தலைவர் டி.ஆர்.வேஷேஷ் குப்தா, "மாணவி குறிப்பிட்ட பிரச்னைகளை கவனத்தில் கொள்ளுமாறு பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொண்டார்.

கடிதம் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. சம்பலில் உள்ள கிராமத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்டார். மூன்று நாள்களுக்குப் பிறகு, காவல்துறையினர் அவரது வீட்டிலிருந்து தற்கொலை கடிதத்தை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details