தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சந்திரயான் 2 விண்கலத்தின் சோதனை ஓட்டம் வெற்றி!

சந்திரயான் 2 விண்கலத்தை ஏவுவதற்கான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ளது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

By

Published : Jul 21, 2019, 10:00 AM IST

Chandrayan 2

நிலவின் தென்துருவப் பகுதியை ஆய்வு செய்யும் சந்திரயான் 2 விண்கலத்தின் 20 மணி நேர கவுண்ட்டவுன் இன்று மாலை 6.43 மணிக்கு தொடங்குகிறது. கடந்த 15ஆம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு சந்திரயான் 2 விண்ணில் செலுத்தவிருந்த நிலையில், என்ஜினில் வாயுக்கசிவு காரணமாக, கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அந்த என்ஜின் கோளாறுகள் சரிசெய்யப்பட்டு ஜூலை 22ஆம் தேதி விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு செய்துள்ளது. அதற்கான கவுண்ட்டவுன் இன்று மாலை தொடங்கவிருக்கிறது.

சந்திரயான் 2 விண்ணில் செலுத்தவுள்ள நிலையில் அதற்கான ஒத்திகை சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. சுமார் 3,800 கிலோ எடையுடன் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் அதனை சுமந்து செல்கிறது.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா நாடுகளைத் தொடர்ந்து நிலவில் ஆராயும் நான்காவது நாடாக இந்தியா இருக்கிறது. இதுவரை எந்த நாடும் முயற்சிக்காத நிலவின் தென்துருவப் பகுதியை ஆய்வு செய்ய சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details