தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 2, 2021, 6:56 PM IST

Updated : Jan 2, 2021, 7:28 PM IST

ETV Bharat / bharat

கோவாக்சின் தடுப்பூசி: அவசரகால அனுமதிக்குப் பரிந்துரை

கோவாக்சின் தடுப்பூசி
கோவாக்சின் தடுப்பூசி

18:50 January 02

டெல்லி:இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கரோனா தடுப்பு மருந்தான கோவாக்சினை அவசரகாலத் தேவைக்குப் பயன்படுத்த அனுமதி வழங்கக்கோரி, மத்திய அரசின் வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்துடன் இணைந்து தயாரித்துள்ள இந்தத் தடுப்பூசியினை மனிதர்களுக்குச் செலுத்தி பரிசோதனை செய்ய இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கடந்த ஜூலை 1ஆம் தேதி அனுமதியளித்தது.

தற்போது நாடு முழுவதும் பல்வேறு இடங்களில், கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்டப் பரிசோதனை நடைபெற்றுவருகிறது.

முன்னதாக, மத்திய வல்லுநர் குழுவின் பரிந்துரையை ஏற்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு கரோனா தடுப்பு மருந்தினை அவசரகால அடிப்படையில் பயன்படுத்த இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியது.

இதையும் படிங்க:இலவச தடுப்பூசி: மத்திய அமைச்சருக்கு நன்றி தெரிவித்த கரோனா வாரியர்ஸ்!

Last Updated : Jan 2, 2021, 7:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details