தமிழ்நாடு

tamil nadu

சிஏஏவுக்கு எதிராக ஆயிரக்கணக்கான பெண்கள் போராட்டம்!

டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் ஜப்ராபாத் மெர்டோ ரயில் நிலையம் அருகே போராட்டம் நடத்தினர்.

By

Published : Feb 23, 2020, 2:09 PM IST

Published : Feb 23, 2020, 2:09 PM IST

Anti-CAA protest: Entry, exit gates of Jaffrabad metro station closed
Anti-CAA protest: Entry, exit gates of Jaffrabad metro station closed

தேசிய குடிமக்கள் பதிவேடு வேண்டாம் (NO NRC) என்ற வசனம் தாங்கிய தொப்பியை அணிந்து, சீலம்பூர் - மவுச்பூர், யமுனா விஹார் ஆகிய வழியாகச் செல்லும் சாலையில் அமர்ந்து பெண்கள் போராட்டத்தை நடத்தினர். போராட்டக்காரர்கள் இன்று காலை ராஜ்காட் வரை பேரணியாகச் செல்வதற்கு திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

Anti-CAA protest: Entry, exit gates of Jaffrabad metro station closed

இந்திய கொடியை ஏந்தி ஆசாதி என முழக்கமிட்ட பெண்கள், மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெறும் வரை இந்த இடத்தை போகமாட்டோம் என்கிறனர்.

Anti-CAA protest: Entry, exit gates of Jaffrabad metro station closed

இந்தப் பகுதியில் காவல் துறையினரால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காவல் துணை ஆணையர் வேத் பிரகாஷ் சூர்யாவும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் இதே இடத்தில் சிஏஏவுக்கு எதிராகப் போராட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details