அஸ்ஸாம் மாநிலம் மோரிகவுன் மாவட்டத்தில் தனித்துவமான பள்ளி ஒன்று இயங்கிவருகிறது. மாவட்டத்தில் உள்ள மற்ற பள்ளிகளுக்கு முன்னுதாரணமாக இந்த பள்ளி செயல்பட்டு வருகிறது. குனுத்துரான் மாடல் என்னும் பிரத்யேகமான முறை இந்த பள்ளியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பள்ளியைச் சேர்ந்த கவுசிக் தேப்நாத் என்ற ஆசிரியர் இந்த திட்டத்தை வகுத்துள்ளார்.
மாணவர்களுக்கு புத்தகத்தை வைத்து மட்டும் கற்றுதராமல், உயற்பயிற்சி, அறிவியல் பூர்வமான கல்வி, வங்கி, விளையாட்டு, சுற்றுசூழல் என பல்வேறுவிதமான துறைகளைப் பற்றி செயல்பாடுகள் மூலம் கற்று தரப்படுகிறது. மாணவர்களை ஈர்க்கும் வகையில் பள்ளியில் உள்ள ஆய்வுகூடத்திற்கு அப்துல் கலாம் பெயர் சூட்டப்பட்டுள்ளது. வங்கியின் அடிப்படையை கற்று தருவதற்கு ஒரு சிறு வங்கியே அங்கு நிறுவப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களின் பணத்தை அங்கு சேமித்துக் கொள்ளலாம்.