தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 4, 2019, 4:16 PM IST

ETV Bharat / bharat

சத்தீஸ்கரில் நக்சல்கள் அட்டூழியம்: நான்கு பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக்கொலை

புவனேஸ்வர்: சத்தீஸ்கர் மாநிலம் கான்கெர் பகுதியில் நக்சல்களுடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் நான்கு பாதுகாப்புப்படை வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பாதுகாப்பு படை வீரர்கள்

சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள கான்கெர் மாவட்டத்தில் நக்சல்கள் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், அப்பகுதியில் நக்சல்களுக்கும், 114 பட்டாலியன் பிரிவைச் சேர்ந்த பாதுகாப்புப்படை வீரர்களுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.

நீண்ட நேரம் நடைபெற்ற இந்தச் சண்டையில் நான்கு பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் இரண்டு வீரர்கள் படுகாயமடைந்தனர். இதனிடையே துப்பாக்கிச்சண்டை குறித்த கூடுதல் விவரங்கள் உடனடியாக வெளிவரவில்லை.

ABOUT THE AUTHOR

...view details