தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 15, 2020, 5:21 PM IST

ETV Bharat / bharat

கரோனாவால் 155 சுகாதார ஊழியர்கள் உயிரிழப்பு - மத்திய அரசு தகவல்

டெல்லி: 64 மருத்துவர்கள் உள்பட 155 சுகாதார ஊழியர்கள் கரோனாவால் உயிரிழந்ததாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரவித்துள்ளது.

Govt
Govt

கரோனா காரணமாக நாட்டில் உயிரிழந்தவர்களின் விரிவான விவரத்தை நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே பேசுகையில், "சுகாதாரம் மாநிலப் பட்டியலில் உள்ள நிலையில், அனைத்து விவரங்களையும் மாநில அரசு தயாரித்து, அதை கவனித்துவருகின்றன. அதன்படி, நாடு முழுவதும் 155 சுகாதாரத்துறை ஊழியர்கள் உயிரிழந்தனர். இதில் 64 மருத்துவர்களும் அடக்கம்.

இதில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் எட்டு மருத்துவர்களும், மகாராஷ்டிராவில் ஆறு மருத்துவர்களும், ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் தலா 5 மருத்துவர்களும் உயிரிழந்தனர். மத்திய அரசு சார்பில் இவர்களுக்கு ரூ. 50 லட்சம் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஏப்ரல் மாதத்தில் சிறப்பு நிதிகள் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டு, ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள், வென்டிலேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளது" என்று அமைச்சர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:சிறுபான்மையினருக்கான நலத்திட்ட உதவிகளுக்கு ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்கீடு!

ABOUT THE AUTHOR

...view details