தமிழ்நாடு

tamil nadu

டெல்லி சுயேச்சை வேட்பாளர்களின் மனு நிராகரிக்கப்பட்டது ஏன்? - உயர் நீதிமன்றம் கேள்வி

By

Published : Feb 3, 2020, 3:21 PM IST

டெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 11 சுயேச்சை வேட்பாளர்களின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து விளக்கம் அளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மத்திய அரசும் தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட்டுள்ளது.

11 Independent candidates plea against nomination rejection
11 Independent candidates plea against nomination rejection

டெல்லி சட்டப்பேரவைக்கு வருகிற 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, முடிவுகள் 11ஆம் தேதி வெளியிடப்படுகின்றன. இந்தத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு அளிக்கப்பட்டு, நிராகரிக்கப்பட்ட 11 சுயேச்சை வேட்பாளர்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.என். பட்டேல், ஹரி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக உரிய பதிலளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் நோட்டீஸ் அனுப்பினர்.

இந்த வழக்கு வருகிற 5ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. முன்னதாக, இதுபோன்ற வழக்கு ஒன்றை நீதிபதி கடந்த 28ஆம் தேதி தள்ளுபடி செய்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

இதையும் படிங்க: 'ஆம் ஆத்மியை முஸ்லிம் லீக் எனப் பெயர் மாற்ற வேண்டும்' - கபில் மிஸ்ரா

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details