தமிழ்நாடு

tamil nadu

பொற்கோயிலில் வழிபாடு செய்த இந்திய ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே!

By

Published : Jun 25, 2023, 8:32 PM IST

இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே சீக்கியர்களின் புனித தலமான பொற்கோயிலில் தனது குடும்ப உறுப்பினர்களுடன் பிரார்த்தனை செய்தார். இந்நிகழ்வில் குருத்வாரா பிரபந்தக் கமிட்டி (SGPC) உறுப்பினர் பகவந்த் சிங் சியால்கா ஜெனரல் பாண்டே மற்றும் அவரது குடும்பத்தினரை கவுரவித்தனர்.

அமிர்தசரஸில் இந்திய ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே குடும்பத்தார்களுடன்  தரிசனம்!
அமிர்தசரஸில் இந்திய ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே குடும்பத்தார்களுடன் தரிசனம்!

பஞ்சாப்:ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் என்று அழைக்கப்படும் பொற்கோயில் பஞ்சாபில் மாநிலம் அமிர்தசரஸில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற குருத்வாரா ஆகும். ஜாதி, மத வேறுபாடின்றி அனைத்து பார்வையாளர்களுக்கும் அமைதி மற்றும் ஆன்மீகத்தின் முக்கியத்துவத்தை வழங்கும் மிகவும் பிரபலமான தலமாகும். இது இந்தியாவில் அதிகம் பார்வையிடப்பட்ட இடங்களில் ஒன்றாகும், உலகம் முடிவதிலுமிருந்து ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் இங்கு வந்து செல்கின்றனர்.

பொற்கோயிலுக்குள் நடைபெறும் தினசரி சடங்குகளின் சடங்குகள் சீக்கிய பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டது இக்கோயிலுக்கு இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே தனது குடும்ப உறுப்பினர்களுடன் பிரார்த்தனை செய்தார். இந்நிகழ்வில் குருத்வாரா பிரபந்தக் கமிட்டி (SGPC) உறுப்பினர் பகவந்த் சிங் சியால்கா ஜெனரல் பாண்டே குடும்பத்தினரை கவுரவித்தனர்.இந்நிகழ்வின் போது இராணுவத் தளபதியுடன் SGPC உறுப்பினர்கள் கலந்துரையாடினர்.

இதையும் படிங்க:பிரதமர் மோடிக்கு 'ஆர்டர் ஆஃப் தி நைல்' விருது - எகிப்து வழங்கிய கெளரவம்!

இந்நிகழ்வில் ஷிரோமணி கமிட்டியின் துணைச் செயலாளர் எஸ். ஷாபாஸ் சிங், மற்றும் தகவல் அதிகாரி எஸ் அம்ரித்பால் சிங், ஆகியோர், சீக்கிய மரபுகள் மற்றும் அமிர்தசரஸில் அமைந்துள்ள ஆலயங்களின் வரலாறு குறித்து ஜெனரல் பாண்டேவிடம் தெரிவித்தனர். மேலும் சச்கந்த் ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் என்ற மத புத்தகம் இராணுவத் தளபதிக்கு வழங்கப்பட்டது.

இதனையடுத்து ,செய்தியாளர்களிடம் பேசிய ஜெனரல் பாண்டே, அமிர்தசரஸ் பொற்கோயில் வந்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், ஆன்மிக நிறைவையும் அளித்ததாகவும் இந்திய ராணுவத்தின் அனைத்து வீரர்களும் நல்ல ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க இறைவனை பிராத்தித்தாகவும் தெரிவித்தர்.

எஸ்ஜிபிசி உறுப்பினர் பகவந்த் சிங் சியால்கா செய்தியாளர்களிடம் பேசுகையில் ஒவ்வொரு மதத்திற்கும் அதற்கென தனி வழிபாட்டு நெறிமுறைகள் இருபதாகவும் ஒவ்வொரு மதத்தின் புனித நூல்கள் மரியாதைக்குரியவை என்று கூறினார் மேலும் இன்று ராணுவத் தளபதி தனது குடும்பத்தினருடன் ஆன்மீக மையத்தில் தரிசனம் செய்ய வந்தும் அவர்களைக் கௌரவித்தது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.

அது மட்டும் மல்லாது ராணுவ முகாம்களில் உள்ள குருத்வாரா சாஹிப்களில் சிறந்த ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டியதன் அவசியம் குறித்து ராணுவத் தளபதியிடம் தெரிவித்ததாக சியால்கா கூறினார்.இந்நிகழ்வில் ஷிரோமணி கமிட்டியின் துணைச் செயலாளர் எஸ்.ஷாபாஸ் சிங், மற்றும் தகவல் அதிகாரி எஸ் அம்ரித்பால் சிங், ஆகியோர்,உடன் இருந்தனர்.

இதையும் படிங்க :அருள்மிகு ஆரணி கற்பகநாதர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம்!

ABOUT THE AUTHOR

...view details