தமிழ்நாடு

tamil nadu

ராஜஸ்தானில் ஆக்சிஜன் பற்றாக்குறை: நோயாளிகள் வேறு மருத்துவமனைக்குச் செல்ல வலியுறுத்தல்!

By

Published : May 4, 2021, 6:19 PM IST

ராஜஸ்தான்: ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கரோனா நோயாளிகள் வேறு மருத்துவமனைக்குச் செல்லுமாறு மிட்டல் மருத்துவமனை வலியுத்தியுள்ளது.

Shortage of oxygen in Rajasthan's hospital
Shortage of oxygen in Rajasthan's hospital

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மிரில் உள்ள மிட்டல் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 90 கரோனா நோயாளிகள் அவதியுற்று வருகின்றனர்.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், ”மருத்துவமனையில் ஆக்சிஜன் இருப்பு இன்றுவரை மட்டுமே உள்ளது. இதனால், வேறு மருத்துவமனைக்கு செல்லுமாறு நோயாளிகளிடம் வலியுறுத்தினோம்.

இந்த நெடிக்கடி நிலையை மாவட்ட ஆட்சியர் பிரகாஷ் ராஜ்புரோகித்திடம் தெரிவித்தோம். அவர் விரைவில் ஆக்சிஜன் வழங்குவதாக உறுதியளித்துள்ளார்" என்றார். மேலும் மிட்டல் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்த காணொலி வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details