தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

ETV Bharat / state

கொடுங்கையூர் வினோதினி.. கிலோ கணக்கில் கஞ்சா.. எப்படி வந்துச்சி? ரவுடியை தட்டித் தூக்கிய போலீஸ்! - chennai ganja arrest

கொடுங்கையூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட இரண்டு பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து இரண்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கைதான வினோதினி, சரவணன்
கைதான வினோதினி, சரவணன் (credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை கொடுங்கையூர் பகுதியில் இரவு நேரங்களில் கஞ்சா விற்கப்படுவதாக கொடுங்கையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில், நேற்று கொடுங்கையூர் போலீசார் எம்.ஆர் நகர் சந்திப்பு அருகே சந்தேகத்திற்கு இடமான பெண் ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர்.

அப்போது அவரிடம் சிறுசிறு பொட்டலங்களாக கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், கொடுங்கையூர் இந்திரா காந்தி நகர் பகுதியை சேர்ந்த வினோதினி (28) என்பதும், இவர் மீது ஏற்கனவே நான்கு கஞ்சா வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.

இதையும் படிங்க:சக மாணவியை ஆபாசமாக சித்தரித்து மார்பிங்! பத்தாம் வகுப்பு மாணவர்கள் மீது போக்சோ

இவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் திரு.வி.க நகர் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த சரவணன் (30) என்ற சரித்திர பதிவேடு ரவுடியை கொடுங்கையூர் போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து சரவணிடமிருந்து கஞ்சா பொருட்களை வாங்கி, வினோதினி விற்று வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து சரவணனிடமிருந்து இரண்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த கொடுங்கையூர் போலீசார் சரவணன், வினோதினி ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details