தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிருஷ்ணகிரி பள்ளி மாணவி வன்கொடுமை விவகாரம்: மாநில அரசு செய்ய வேண்டியது என்ன? - L Murugan - L MURUGAN

உதயநிதி துணை முதல்வரானால் தமிழ்நாட்டிற்கு திமுகவால் ஒன்றும் மாற போவது இல்லை என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய  இணை அமைச்சர் எல்.முருகன்
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 20, 2024, 11:50 AM IST

தூத்துக்குடி:சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் மரியாதை செலுத்துவதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சென்னையிலிருந்து விமான மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்தார்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,"பிரதமர் மூன்றாவது முறையாக மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்து இருக்கின்றார். இதனையடுத்து ஏழை, எளிய மக்களுக்காக அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் மூன்று கோடி வீடுகள் கட்ட ஒப்புதல் கொடுத்துள்ளார்.

இரண்டாவது கையெழுத்தாக 20,000 கோடி ரூபாய்க்கு விவசாயிகளுக்கு சன்மான ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கு 1,800 கோடி ரூபாய் கொடுத்து உள்ளார்கள். அதேபோல தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தை மேம்படுத்தும் பணியைத் தொடங்கி வைத்துள்ளார்" என்றார்.

மேலும் 2047ஆம் ஆண்டு இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி கடுமையாக உழைத்து வருகின்றார். தூத்துக்குடி மாநகராட்சியில் சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றாதது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.

மேலும், தூத்துக்குடி ரயில் நிலையத்தை தரம் உயர்த்திக் கொண்டிருக்கின்றோம். தூத்துக்குடி விமான நிலையத்தில் விரிவாக்க பணியானது ஓடுதளம் 3 கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்படுகிறது. சென்னையை விட இதுதான் அதிகம், இதனால் அதிக விமானங்கள் தரை இறங்கக் கூடும்.

ஆகவே, மத்திய அரசு இப்பகுதியில் தொழில் வளர்ச்சி வேலைவாய்ப்பை மையமாகக் கொண்டு சிறப்பாக பணி செய்து கொண்டிருக்கிறது எனக் குறிப்பிட்டார். மேலும், கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மாநில அரசாங்கம் கடுமையாக தண்டனைகளைப் பெற்றுத் தர வேண்டும். மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சரியான நடவடிக்கையை மாநில அரசு எடுக்காததால் சிபிஐ போன்ற விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

மாநில அரசாங்கம் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். கலைஞர் நாணய வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டது திமுக- பாஜக உறவு வெளிப்பட்டு விட்டது என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

நாணய வெளியீட்டு விழா அரசாங்க விழா, இது அரசியலுக்கு அப்பாற்பட்ட நிகழ்வு என தெரிவித்தார். மேலும் உதயநிதி துணை முதல்வரானால் தமிழ்நாட்டிற்கு திமுகவால் ஒன்றும் மாறப் போவது இல்லை. தமிழ்நாடு அரசாங்கம், தமிழக அமைச்சர்கள் மக்களுக்கு என்ன தீங்கு செய்து கொண்டிருக்கிறார்களோ அது இரட்டிப்பாகும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:"பாஜகவுடன் கள்ள உறவு என எங்களைப் பார்த்து சொன்னபோது மட்டும் இனித்தது?" - எடப்பாடி பழனிசாமி தாக்கு!

ABOUT THE AUTHOR

...view details