தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு: நாளை தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு! - TNPSC GROUP 4 EXAM

TNPSC Group 4 Exam: தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் குரூப் 4 தேர்வுக்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது. நாளை சுமார் 20 லட்சம் பேர் இந்த தேர்வினை எழுத உள்ளனர்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 8, 2024, 11:05 AM IST

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

விழுப்புரம்: தமிழ்நாடு அரசில் காலியாக கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 6,244 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு நாளை(ஜூன் 9) நடைபெறவுள்ளது.

தமிழகம் முழுவதும் சுமாா் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் இத்தோ்வை எழுத விண்ணப்பித்துள்ளனா். இந்நிலையில் குரூப்- 4 பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கள்ளக்குறிச்சியில் மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் தலைமையில் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் நா.சத்தியநாராயணன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ரமேஷ், திருக்கோவிலூா் வருவாய் கோட்டாட்சியா் ரெ.கண்ணன் உள்ளிட்டோா் பங்குபெற்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தம் 41,618 பேர் இந்த தேர்வினை எழுத உள்ளனர். கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை உள்ளிட்ட 5 வட்டங்களில் 138 மையங்கள் அமைக்கப்படவுள்ளன.

மேலும், விழுப்புரம் மாவட்டத்திலும் டிஎன்பிஎஸ்சி தோ்வு தொடா்பாக அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியரகத்தில் நேற்று நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம்- 26,578, செஞ்சி-6,619, கண்டாச்சிபுரம் -2,748, மரக்காணம்-2,007, மேல்மலையனூா்-1,900, திருவெண்ணெய்நல்லூா்-3,777, திண்டிவனம்-10,361, வானூா்-5,381, விக்கிரவாண்டி-4,725 என 9 வட்டங்களிலும் சேர்த்து 64,106 போ் இத்தேர்வினை எழுத உள்ளனா்.

மாவட்ட வருவாய் அலுவலா் மு.பரமேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தோ்வுப் பணியில் ஈடுபடும் அலுவலா்கள் பங்கேற்றனா். அதில் அவர்களுக்கு தேர்வு நடைபெறும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் பல்வேறு ஆலோசனைகளை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினாா்.

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சியில் 27 பறக்கும் படைக் குழுக்கள், 52 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. துணை ஆட்சியா் நிலையிலான அலுவலா்கள் பறக்கும் படைக் குழுவில் இருந்து தோ்வைக் கண்காணிப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு:தேர்வு எழுத வருபவர்கள் தேர்வுக்கூடத்தினுள் கைப்பேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை கொண்டு செல்ல அனுமதியில்லை, கருப்பு பந்துமுனை பேனாவினால் மட்டுமே தோ்வு எழுத வேண்டும்

இதையும் படிங்க: பிஎஸ்சி, பிசிஏ மாணவர்களுக்கு சென்னை ஐஐடியில் இலவச பயிற்சி! - விண்ணப்பிப்பது எப்படி?

ABOUT THE AUTHOR

...view details