தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளி மாணவிக்கு பாலியல் சீண்டல்; பள்ளி ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

Pudukkottai Pocso case: புதுக்கோட்டையில் டியூசன் படிக்க வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தனியார் பள்ளி ஆசிரியருக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 6, 2024, 7:44 AM IST

Pudukkottai Pocso case
பள்ளி மாணவிக்கு பாலியல் சீண்டல்

புதுக்கோட்டை: தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வென்ஷீலிக் இஸ்ரேல் பிட்டு(31) என்பவர் புதுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர் தனது வீட்டில் பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் நடத்தி வந்துள்ளார்.

இதனிடையே, கடந்த 2022ஆம் இவரது டியூசனில் படிக்க வந்த, 15 வயது பள்ளி மாணவியிடம் சந்தேகத்திற்கு விளக்கம் அளிப்பதாகக் கூறி, மற்ற மாணவர்கள் வருவதற்கு முன்பாக மாணவியை தனி அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

தொடர்ந்து, அந்த மாணவியை மிரட்டி பலமுறை பாலியல் சீண்டல் அளித்துள்ளார். இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட அச்சிறுமி, தனது பெற்றோரிடம் ஆசிரியர் அளித்த தொல்லை குறித்து தெரிவித்துள்ளார். இதனை அடுத்து மாணவியின் பெற்றோர், புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதன் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஆசிரியர் குற்றம் செய்தது உறுதியானது. இந்நிலையில், நேற்று (மார்ச் 5) இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு வழங்கினார்.

இதையும் படிங்க:6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; வேன் ஓட்டுநருக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை!

ABOUT THE AUTHOR

...view details