சென்னை: முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 101வது பிறந்தநாள் விழாவை ஒட்டி, திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி திருவுருவச் சிலைக்கு இன்று மரியாதை செலுத்தினார்.
அண்ணா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களில் மலர்வளையம் வைத்து, மலர்தூவி அவர் மரியாதை செலுத்தினார். மேலும், 'கலைஞர் நூற்றாண்டு நிறைவு' சிறப்பு மலர்கள் வெளியிட்டு, சிறப்பு புகைப்படக் கண்காட்சி மற்றும் குறும்படத்தை பார்வையிட்டார். அதேபோல, சென்னை அண்ணா சாலை, ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதியின் சிலைக்கும் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது, நூற்றாண்டு விழா மலர் வெளியிட்டார். பின்னர், கலைஞர் வரலாறு புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். 'கலைஞர் நூற்றாண்டு நிறைவு நினைவலைகள்' என்ற பெயரில் இந்த புகைப்பட கண்காட்சி அமைக்கபட்டுள்ளது. இதில் கலைஞரை நினைவு கூறும் வையில் அவரது அரசியல் மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் புகைபடமாக அமைக்கபட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, கருணாநிதியின் வரலாற்று நினைவு குறும்படத்தினை வெளியிட்டு பார்வையிட்டார்.
அவருடன் எம்.பி-கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, சேகர்பாபு, கே.என்.நேரு மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.அறிஞர் அண்ணா நினைவிடத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
அதனையடுத்து சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கலைஞர் திருவுருச்சிலைக்கு முதல்வர் மரியாதை செலுத்தினார். அடுத்தடுத்து முரசொலி அலுவலகத்தில் உள்ள கலைஞர் உருவ சிலைக்கும், அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் உருவ சிலைக்கு முதல்வர் மரியாதை செலுத்தினார். முன்னதாக, சென்னை கோபாலபுரம் இல்லத்தில், அலங்கரித்து வைக்கப்பட்ட கருணாநிதி உருவபடத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.