தமிழ்நாடு

tamil nadu

நபார்டு வங்கியில் இயற்கை உரம்; மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு! - Organic Fertilizers

Madras High Court: நபார்டு வங்கியில் வட்டியில்லா கடன் பெறும் விவசாயிகளை இயற்கை உரம் வாங்கும்படி நிர்பந்திக்க கூடாது என உத்தரவிடக் கோரிய வழக்கில், மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 24, 2024, 9:59 PM IST

Published : Jul 24, 2024, 9:59 PM IST

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம் (CREDITS - ETV BHARAT TAMIL NADU)

சென்னை: மத்திய அரசின் நபார்டு வங்கி, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கி வருகிறது. இந்த கடன் வசதியைப் பெறும் விவசாயிகள், டான்ஃபெட் வழங்கும் இயற்கை உரத்தை வாங்க வேண்டும் என நிர்பந்திக்கப்படுவதாக, கடலூரைச் சேர்ந்த விவசாயி ஜோதிபாசு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், “தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய இந்த இயற்கை உரங்களால் எந்த பயனும் இல்லை எனவும், அவை வெறும் மண் தான் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக உள்ளூர் வேளாண் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், இதில் மிகப்பெரிய ஊழல் நடப்பதாகவும் மனுவில் குற்றம் சாட்டி இருந்தார்.

மேலும், நகராட்சிகள், பேரூராட்சிகள் உற்பத்தி செய்யும் இந்த இயற்கை உரங்கள் டன்னுக்கு 1,000 முதல் 3,000 ரூபாய் வரை மட்டுமே விற்கப்படும் சூழலில் டான்ஃபெட் மூலம் விற்கப்படும் உரங்கள் டன்னுக்கு 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுவதாகவும் மனுவில் புகார் தெரிவித்துள்ளார்.

தற்போது இயற்கை உரம் கொள்முதலுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும், சிறிய விவசாயிகளின் நலன் கருதி இயற்கை உரங்களை நியாயமான விலைக்கு விற்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும், கடன் பெறும் விவசாயிகளிடம் இயற்கை உரம் வாங்க வேண்டும் என நிர்பந்திக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் எனவும், டெண்டரை இறுதி செய்ய தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி குமரேஷ் பாபு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் புருசோத்தமன் ஆஜராகி வாதிட்டார். இதனையடுத்து, மனு குறித்து மூன்று வாரங்களில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (CREDITS - ETV BHARAT TAMIL NADU)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை; வைகோவின் மனுவை ஏற்ற டெல்லி தீர்ப்பாயம்! - LTTE ban in India

ABOUT THE AUTHOR

...view details