தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சி கொள்ளிடம் ஆற்று நீரில் தத்தளித்த நபர்.. குடிபோதையில் தூங்கியிருந்தபோது நேர்ந்த விபரீதம்! - person rescue in kollidam river - PERSON RESCUE IN KOLLIDAM RIVER

person rescue in kollidam river: திருச்சி கொள்ளிடம் ஆற்றின் சிமெண்ட் கட்டையில் படுத்து உறங்கிய நபரை தண்ணீர் சூழ்ந்ததால், அதில் தத்தளித்துக் கொண்டிருந்தவரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.

தீயணைப்புப் படையினரால் மீட்கப்பட்ட நபர்
தீயணைப்புப் படையினரால் மீட்கப்பட்ட நபர் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 1, 2024, 2:34 PM IST

திருச்சி: ஶ்ரீரங்கம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளிடம் ஆற்றின் மணல் வெளி மற்றும் தடுப்பு கட்டைகள் மீது அந்த பகுதியைச் சார்ந்த பலர் ஆறு வறண்டு இருப்பதால் அங்கே இரவு நேரத்தில் உறங்குவது வழக்கம். இந்நிலையில் ஆற்றின் குறுக்கே மேம்பாலத்தின் தூண் பகுதியின் கீழ் உள்ள சிமெண்ட் கட்டையில் 50 வயது மதிக்கத்தக்க நபர் உறங்கிக் கொண்டிருந்தார்.

ஆற்று நீரில் தத்தளித்த நபர் மீட்கப்படும் காட்சி (Credits - ETV Bharat Tamil Nadu)

அப்போது முக்கொம்பு அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கொள்ளிடம் ஆற்றின் இரண்டு கரைகளையும் தொட்டுக் கொண்டு ஓட தொடங்கியது. இந்நிலையில் உரங்கிய நபர் விழித்துப் பார்த்தவுடன் தண்ணீர் சூழ்ந்ததால் அவரால் கரைக்கு வர முடியாமல் தவித்துக்கொண்டிருந்தார். பின்னர் பாலத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்ட நபர் ஒருவர் இதனைக்கண்டு தீயணைப்புத்துறைக்குத் தகவல் அளித்தார்.

ஆற்றின் நடுவே சிக்கிக்கொண்ட நபரை, மேம்பாலத்தின் மேற்பகுதியில் இருந்து கயிறு மூலம் தீயணைப்பு படை வீரர் ஒருவரை ஆற்றுக்குள் இறக்கி மற்றொரு கயிறு மூலம் ஆற்று வெள்ளத்தின் நடுவே சிக்கிக்கொண்டு இருந்த நபரை, திருச்சி ஸ்ரீரங்கம் தீயணைப்பு மீட்பு துறையினர் மீட்டு மேலே கொண்டு வந்தனர்

பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த நபர் திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியை சேர்ந்த சசிகுமார் (60) என்பதும், இரவு நேரத்தில் மது அருந்திவிட்டு கொள்ளிடம் ஆற்றின் கீழே சிமெண்ட் கட்டையில் உறங்கி உள்ளார் என்பதும் தெரியவந்தது. நேற்று மாலை மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் 1.75 லட்சம் கன அடியாக வெளியேற்றப்பட்டதால், திருச்சி காவிரி, கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:ஒகேனக்கல் நீர்வரத்து வினாடிக்கு 1.28 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு!

ABOUT THE AUTHOR

...view details