மதுரை:மதுரை அண்ணா நகர் அருகே உள்ள யாகப்பாநகரைச் சேர்ந்தவர் சேதுபதி. இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், ரக்ஷனா (7) மற்றும் ரக்ஷிதா (5) என்ற இரண்டு குழந்தைகளும் இருந்தனர். இந்நிலையில், குடும்பத் தகராறு காரணமாக சேதுபதி, இன்று காலை கூர்மையான ஆயுதத்தால் இரண்டு குழந்தைகளின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாநகர் காவல்துறையினர், குழந்தைகளின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலைக்கு முயன்ற சேதுபதியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.