தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஆற்காடு சுரேஷின் மனைவிக்கு செப்.2 வரை நீதிமன்றக் காவல்! - armstrong murder case - ARMSTRONG MURDER CASE

Armstrong Murder Case: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக, ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடிக்கு எழும்பூர் நீதிமன்றம் செப்டம்பர் 2 வரை நீதிமன்றக் காவல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங்
ஆம்ஸ்ட்ராங் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 19, 2024, 4:37 PM IST

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5ஆம் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக இதுவரை 24 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் ஒருவரை என்கவுண்டர் செய்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட நபர்களை மாறி மாறி காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும், ஆற்காடு சுரேஷின் மனைவிக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகித்த போலீசார், ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியை தேடி வந்தனர். இந்நிலையில், அவர் ஆந்திராவில் தலைமறைவாக இருப்பதை அறிந்த தனிப்படை போலீசார், அங்கு சென்று நேற்று பொற்கொடியை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும், ஆற்காடு மனைவி பொற்கொடிக்கும் தொடர்பிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, அவரை கைது செய்த தனிப்படை போலீசார், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பொற்கொடியை செப்டம்பர் 2ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் தற்போது வரை 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:ஆம்ஸ்ட்ராங் கொலை: சீசிங் ராஜா எங்கே? நான்கு மனைவிகள் கொடுத்த அப்டேட்..! - Armstrong murder case

ABOUT THE AUTHOR

...view details