தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 42வது முறையாக நீட்டிப்பு! - Senthil Balaji judicial custody

Senthil Balaji judicial custody: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக்காவலை ஜூலை 4ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 1, 2024, 6:28 PM IST

கோப்புப் படம்
கோப்புப் படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை:சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்துள்ளன. தற்போது செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் (ஜூலை 01) முடிவடைந்தது. இதனால் புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜூலை 4ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 42வது முறையாக நீட்டிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:வழக்கு விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுகிறார் செந்தில் பாலாஜி - அமலாக்கத் துறை குற்றச்சாட்டு! - Senthil balaji Case

ABOUT THE AUTHOR

...view details