ஈரோடு:ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வட மாநிலத்தில் இருந்து வந்து தங்கி, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், பெருந்துறை பணிக்கம்பாளையம் பகுதியில் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த சிலர் சட்ட விரோதமாக தங்கி இருப்பதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் அடிப்படையில், போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது, பெருந்துறை பணிக்கம்பாளையம் பகுதியில் தங்கி, தொழிற்சாலைகளுக்கு வேலைக்குச் சென்று வந்த 25க்கும் மேற்பட்ட நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், சிலர் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: துப்பாக்கி, அரிவாளுடன் கரூரில் சுற்றித்திரிந்த கூலிப்படையினர் கைது!