தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

நகை பிரியர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. பட்ஜெட் எதிரொலியாக தங்கம் விலை குறைய வாய்ப்பு! - BUDGET 2025 ON GOLD AND SILVER

2025 பட்ஜெட்டைத் தொடர்ந்து, தங்கத்தின் விலை குறையும் எனவும், அதேசமயம் வெள்ளி விலை அதிகரிக்கலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

பெண் தங்க நகையை பார்ப்பது போன்ற கோப்புப்படம்
பெண் தங்க நகையை பார்ப்பது போன்ற கோப்புப்படம் (ANI)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 1, 2025, 9:55 AM IST

டெல்லி:நடப்பாண்டிற்கான (2025-26) மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை (பிப்.1) 11 மணிக்கு, தனது எட்டாவது நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளார். இந்த நிலையில், பட்ஜெட்ட்டின் எதிரொலியாக தங்கத்தின் விலை குறையவுள்ளதாகவும், அதேவேளையில் வெள்ளியின் விலை அதிகரித்து வெள்ளி சந்தையில் மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

அதாவது 2025-26 ஆம் ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கையை பரிசீலனை செய்து பார்த்ததில், மக்கள் தங்க நகை வாங்கும் திட்டத்தை செயல்படுத்த இதுவே சிறந்த ஆண்டாக இருக்கலாம். ஏனென்றால், பட்ஜெட்டைத் தொடர்ந்து தங்க நகை விலை குறையும் எனவும், வெள்ளி விலை குறையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையின் படி, 2025ஆம் ஆண்டில் பொருட்களின் விலை 5.1 சதவீதமும், 2026ஆம் ஆண்டில் 1.7 சதவீதமும் குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல, இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பு மற்றும் உலோகங்கள் மற்றும் விவசாய மூலப்பொருட்களுக்கான நிலையான எதிர்பார்ப்பு ஆகியவற்றால், சந்தையில் எண்ணெய் விலைகளில் சரிவு ஏற்படும் வாய்ப்புள்ளது.

இதுகுறித்து உலோகங்களைக் கையாளும் பிரிவு நிபுணர்கள் கூறுகையில், "தங்கத்தின் விலைகள் குறையும், அதே நேரத்தில் வெள்ளி விலைகள் அதிகரிக்கக்கூடும் எனவும், இரும்புத் தாது மற்றும் துத்தநாக விலைகளில் குறைவு காரணமாக, உலோகங்கள் மற்றும் தாதுக்களின் விலைகள் குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக, உள்நாட்டு பணவிக்கம் காரணமாக இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படும்".

"உலகளாவிய சந்தைகளில் ஏற்படும் நிச்சயமற்ற தன்மை காரணமாக அந்நிய செலாவணி இருப்புக்களில் ஏற்ற இறக்கங்களுக்கு வழிவகுத்துள்ளது. ஏனெனில், மத்திய வங்கிகள் தங்களது அபாயங்களைக் குறைக்க இருப்புக்களை சரிசெய்து கொள்கிறது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர், 2024ஆம் ஆண்டு தங்கக் கட்டிகள் விலை அதிகரித்தது. இது பெரும்பாலும் வளர்ந்து வரும் சந்தை மத்திய வங்கிகளின் தங்கக் குவிப்பால் ஏற்படும்".

அதாவது உலகளவில் ஏற்படும் விலை மாற்றம், பண்டிகை காலங்களுக்காக முன்னதாகவே நகை வாங்குதல், சேமிப்பிற்காகவும், எதிர்கால தேவைக்காகவும் வாங்குதல் போன்றவை தங்க இறக்குமதி அதிகரிப்புக்கு காரணமாக உள்ளது.

அரசாங்கம் நடப்பாண்டின் ​​தங்கத்தின் விலை மாற்றம் மற்றும் பணவீக்கம், வர்த்தகம் மற்றும் அந்நிய செலாவணி இருப்புகளில் அவற்றின் தாக்கத்தை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. இருந்தாலும், நிபுணர்கள் வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளனர். என்னவென்றால், இந்தியாவில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் சில நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தினால், தங்கத்தின் விலைகள் குறையக்கூடும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபின், தங்கம் விலை குறைந்தால் அது சாமனிய மக்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details