விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர், சிவக்குமார். கூலித்தொழிலாளி. இவருக்கு 8 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் நேற்று (மார்ச்.6) வழக்கம் போல் வேலைக்குச்சென்று, இரவு வீட்டிற்கு வந்த சிவக்குமார், தன் மகள் அழுது கொண்டிருந்ததைப் பார்த்து மகளிடம் விவரம் கேட்டுள்ளார்.
அதற்கு அவருடைய மகள் வீட்டின் அருகில் உள்ள சிறுவன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறி இருக்கிறாள். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் மரக்காணம் காவல் நிலைத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் மரக்காணம் காவல் துறையினர் அச்சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் பிடித்து விசாரித்தனர்.