வேலூர் மாவட்டத்தில் தேர்தல் அலுவலகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றன. சிலம்பாட்டம், மயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட கிராமிய நிகழ்ச்சிகள் மூலமும் பொதுமக்களிடம் தேர்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று வேலூர் புதிய பேருந்து நிலையம் வளாகத்தில் 200 பெண்கள் பங்கேற்ற பிரமாண்ட ரங்கோலி கோலப்போட்டி நடைபெற்றது. அவர்கள் இந்தியாவின் வரைபடத்தை வரைந்து அதனுள் பல வண்ணங்களை நிரப்பினர். இந்திய வரைபட வடிவில் வரையப்பட்ட இந்த கோலம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதேபோல் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விரலில் மை வைக்கப்பட்ட கோலங்களும் வரையப்பட்டன.